நிழல்
அசையாதே
வரைந்தவன் வண்ணம் தீட்டாமல் விட்டுவிடனோ
என்று கேட்ட சிலருக்கு
உண்மை தெரிந்து விடும்
Monday, September 29, 2008
தனிமை
என் முதல் மற்றும் முதன்மை நண்பன்
எப்போதும் எனை அரவணைக்க விரித்தபடியே காத்திருக்கும் கரங்கள்
ஏமாற்றங்களுக்கு பிறகெல்லாம் என்னால் உட்கொள்ளப்படும் மருந்து
தேடும்போதெல்லாம் துணையாக வர நான் கண்டடைந்த உறவு
நான் பையித்தியமாக பயிற்றுவிக்கும் பள்ளி
என் பித்தம் தெளிய சிகிச்சை தரும் மருத்துவமனை
முன் ஜென்மங்களை கோடிட்டு காட்டும் பேனா
உறவுகளுக்கு பின்னால் ஒளிந்துருகும் வெறுமையை உடுருவி பார்க்க உதவும் கண்ணாடி
கால் உடைந்து போன என் மனதில் முளைத்த செட்டைகள்
நிசப்தத்தின் ராகங்களை இசைக்கும் கருவி
Subscribe to:
Posts (Atom)